‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
2002ல் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு ஹிந்தி சினிமாவில் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார். திருமணத்திற்கு பிறகு ஹாலிவுட் படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். இதன் காரணமாக இந்திய படங்களில் அவர் நடிப்பது குறைந்துவிட்டது.
பிரியங்கா சோப்ரா தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛சமீபகாலமாக ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் அதிகமாக நடித்து வருகிறேன். அதனால் இந்தியாவையும் இந்திய படங்களையும் ரொம்பவே மிஸ் செய்கிறேன். இந்த நேரத்தில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் மூலம் மீண்டும் இந்திய சினிமாவுக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னதான் ஹாலிவுட் படங்களில் பிசியாக நடித்தாலும் இனி இந்திய படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன்'' என்று கூறியுள்ளார்.