மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை நேற்று (ஜூன் 23) நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தார்கள். அவருக்கு தான் கொக்கைன் கொடுத்ததாக பிரதீப் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு நடத்தப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரும் தான் செய்த தவறை ஒத்துக் கொண்டதோடு தனக்கு ஜாமின் கேட்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், பிரசாத் என்ற அந்த நபர் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி நடிகர் கிருஷ்ணாவுக்கும் தான் கொக்கைன் கொடுத்ததாக தெரிவித்ததன் அடிப்படையில் தற்போது கேரளாவில் படப்பிடிப்பில் இருந்து வரும் நடிகர் கிருஷ்ணாவையும் தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தியுள்ளார்கள். மேலும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என்பது தெரிகிறது.