சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளாகவே விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த 241 பேர் மரணத்தை தழுவினார்கள். ஒரே ஒரு பயணி மட்டும் தப்பித்தார். அது மட்டுமல்ல அந்த விமானம் விழுந்த பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி உணவு விடுதியில் அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பல மாணவர்களும் கூட இந்த விபத்தில் பலியானார்கள். நாடெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை இது ஏற்படுத்தியது. பலரும் தங்களது இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இந்த விபத்து குறித்து பேசும்போது, “நான் வளர்ந்தது படித்தது எல்லாமே ஆமதாபாத்தில் தான். அதிலும் விபத்து நடந்த இடத்திற்கு சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணி நகரில் தான் நான் படித்து வளர்ந்தேன்.. இப்போது விபத்து நடந்த இடம் எல்லாம் நான் சுற்றித்திரிந்த பகுதிகள் தான். அந்த நினைவுகள் இன்னும் எனக்கு பசுமையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட இடத்தில் இந்த விபத்து நடந்திருப்பதை நினைக்கும்போது என் மனம் மிகுந்த வேதனை தெரிகிறது. நான் மட்டுமல்ல, அங்கே இருக்கும் எனது நண்பர்கள் கூட அதிர்ச்சியில் இருக்கின்றனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.