இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகர் விக்ரம் நடித்து கடைசியாக வெளியான 'வீர தீர சூரன் 2' படத்திற்கு பிறகு 'மண்டேலா, மாவீரன்' ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கின்றார். இது விக்ரமின் 63வது படமாக உருவாகிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது.
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் திரைக்கதை பணியை மேற்கொண்டு வந்தார் மடோன் அஸ்வின். ஆனால், இந்த படத்தின் திரைக்கதையில் விக்ரம், மடோன் அஸ்வின் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இப்படம் கைவிடப்பட்டது என்கிற தகவல்கள் பரவி வருகிறது .ஆனால், இது குறித்து எந்தவொரு மறுப்பும் படக்குழு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.