ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை |
'முண்டாசுப்பட்டி, ராட்சசன்' படங்களுக்குப் பிறகு இயக்குனர் ராம்குமார், விஷ்ணு விஷால் இணைந்துள்ள படம் 'இரண்டு வானம்'. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
நேற்று படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், இயக்குனர் ராம்குமாருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இரண்டு வானம்' கடைசி நாள் படப்பிடிப்பு, 150வது நாள் படப்பிடிப்பு. இந்தப் பயணத்தை நீங்களும் விரைவில் பெரிய திரையில் உணரப் போகிறீர்கள். தனித்துவமான சுவாரசியமான ஒன்றை மீண்டும் 'குக்' செய்துள்ளார் ராம்குமார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் கதை என்ன மாதிரியான கதை என்பது தெரியவில்லை. இருந்தாலும் அதற்காக 150 நாட்கள் படப்பிடிப்பு என்பது அதிக நாட்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். முன்னணி நடிகர், இயக்குனர், பெரிய பட்ஜெட் படம், சரித்திரப் படம் என்றால் அத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடத்தினாலும் பரவாயில்லை. இந்த கூட்டணிக்கு இத்தனை நாட்கள் படப்பிடிப்பு என்பது மிக அதிகமே என்பது பரவலான கருத்தாக உள்ளது.
சிக்கனமான படமெடுக்கும் சத்யஜோதி நிறுவனம் இவ்வளவு நாட்கள் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதே பெரிய விஷயம் என்கிறார்கள். படம் வந்த பிறகே அத்தனை நாட்கள் ஏன் என்ற விவரம் ரசிகர்களுக்கும் தெரிய வரும்.