காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடித்துள்ள 'டிஎன்ஏ' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள்' படத்தின் கதையை நான் முதலில் சொல்லியது அதர்வாவிடம்தான். நான் முரளி சாரோட பயங்கரமான ரசிகன். 'இதயமே இதயமே'ன்னு நமக்காக பாட்டுப் பாடி அழுத ஜீவன் அவர். ஒன் சைட் லவ் அதிகமா பண்ணவர்.
அவர் பையன் ஹீரோவாயிட்டாருன்னு சொன்ன உடனே, 'பாணா காத்தாடி' படம் வந்த உடனே 'பரியேறும் பெருமாள்' படத்துல வச்சி யோசிச்ச ஹீரோ அதர்வா தான். முரளி சார் பையன், நம்மள மாதிரி கருப்பா இருப்பாரு. கதைக்குப் பொருத்தமான இருப்பாருன்னு அவரை சந்திச்சி கதை சொன்னேன். ஆனா, அவரோட பிஸில அது நடக்கல. கதை சொன்ன அன்னைக்கு ரொம்ப பீல் பண்ணேன்.
முரளி சார் பையன் ஒத்துக்கலையே, யாரை வச்சி படம் பண்றது. நம்மளப் பார்த்து அவர் டைரக்டர்னு ஏத்துக்கலையேன்னு யாரு நம்பப் போறான்னு மனைவி கிட்ட கூட பீல் பண்ணேன். ஒரு நாள் அவர் கிட்ட சொல்லுவேன்னு யோசிச்சேன். அதுக்கப்புறம் இப்பதான் சந்திக்கிறேன். கிட்டத்தட்ட ஏழு வருஷமாச்சி,'' என்றார்.
அவருக்கு அடுத்து பேச வந்த அதர்வா, “மாரி சார், இங்க வந்து 'பாம்' போட்டுப் போயிட்டாரு. 'பரதேசி' படத்துக்குப் பிறகு நிறைய விஷயம் நடந்துட்டிருந்தது. நிறைய விஷயம் மண்டைக்குள்ள சுத்திட்டிருந்தது. ஒண்ணே ஒண்ணு சொல்றேன் சார். கடந்த பத்து வருஷத்துல நான் பார்த்த சிறந்த படங்கள்ல ஒண்ணு 'பரியேறும் பெருமாள்'. அதை மிஸ் பண்ணதுல வருத்தமில்ல. கதிர் ரொம்ப நல்லா பண்ணியிருந்தாரு. வேற ஒரு ஸ்கிரிப்ட் இருந்தா சொல்லுங்க, பண்ணுவோம்,” என்றார்.