கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
விஜய் டிவியில் வெளியான 'பாரதி கண்ணம்மா' என்ற சீரியலில் அஞ்சலி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. அதன் பிறகு ஜீ தமிழில் வெளியான அமுதாவும் அன்னலட்சுமியும், விஜய் டிவியில் வெளியான 'மகாநதி' என பல சீரியலில் நடித்த கண்மணி, பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு தனது வளைகாப்பு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நடிகை கண்மணி, தற்போது கடந்த ஜூன் 8-ம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்த தகவலை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதோடு, நாங்கள் இருவரும் ஒரு காதல் கதை எழுதினோம். வாழ்க்கை அதன் தொடர்ச்சியாக ஒரு விஷயத்துடன் எங்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. எங்கள் பயணம் ஒரு திருப்பத்துடன் தொடர்கிறது என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடிகை கண்மணி.