படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்த 1987ம் ஆண்டு வெளியான படம் 'நாயகன்'. இப்படத்தில் கமலுடன் சரண்யா, கார்த்திகா, ஜனகராஜ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, இளையராஜா இசை அமைத்திருந்தார். இப்படம் தமிழகத்தில் 200 நாட்களுக்கு மேல் ஓடியது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி இந்த நாயகன் படத்தை நேற்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் எஸ் .ஆர். பிலிம் பேக்டரி எஸ். ஆர் .ராஜன் என்பவர் நாயகன் படத்தின் ரீ ரிலீஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நாயகன் படத்தின் வெளியீட்டு உரிமையை எங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில் தற்போது வி. எஸ் .பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அப்படத்தை முறைகேடாக ரிலீஸ் செய்கிறார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நாயகன் படத்தை ஒப்பந்த அடிப்படையில் ரீரிலீஸ் செய்வதால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளார். அதனால் இப்படத்தின் ரிலீஸ்க்கு ஏற்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இருக்கிறது. அதோடு நீதிபதி செந்தில்குமார், நாயகன் படத்தை தான் 16 முறை பார்த்திருப்பதாகவும், காட்சி வாரியாக தன்னால் இந்த படத்தை மீண்டும் சொல்ல முடியும் என்றும் ஒரு கருத்து கூறியிருக்கிறார்.