படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் தெலுங்கில் அடுத்தடுத்து கடைசியாக இயக்கிய இரண்டு படங்களும் வரவேற்பை பெற தவறின. இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் பூரி ஜெகன்நாத். இதில் கதாநாயகியாக கபாலி புகழ் ராதிகா ஆப்தே நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்று ராதிகா ஆப்தே சொல்லிவிட்டார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகை நிவேதா தாமஸ் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்கிற செய்தி தற்போது வெளியாகி உள்ளது. சினிமாவில் கதாநாயகியாக நடித்ததை விட பாபநாசம், தர்பார் போன்ற படங்களில் ஹீரோக்களின் மகளாகவும் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் நிவேதா தாமஸ்.