தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது குழந்தைகளுக்கான பேண்டசி படத்தின் மூலம் அறிமுகமாகிறார் எஸ்.லதா. 'மரகதமலை' என்ற படத்தை தயாரித்து, கதை திரைக்கதை, வசனம், பாடலை எழுதி இயக்கவும் செய்கிறார்.
இப்படத்தில் மாஸ்டர் சஷாந்த், அரிமா, மஹித்ரா, கலைக்கோ நடிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக சந்தோஷ் பிரதாப், கதாநாயகியாக தீப்ஷிக்ஹா மற்றும் முதன்மை கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, ஜெகன், சம்பத் ராம், வில்லானாக டெம்பர் வம்சி மற்றும் பலர் நடித்துள்ளனர். எல்.வி.முத்துகணேஷ் இசை அமைக்கிறார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் லதா கூறியதாவது: ராஜா ராணி கதைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். சின்ன வயதில் பாட்டி, அம்மா சொல்லும் கதைகள் பல கேட்டு வளர்ந்தேன். கேட்ட கதையோடு என் கற்பனையும் சேர்த்து என் குழந்தைகள் உட்பட யாரை பார்த்தாலும் கதை சொல்லி அசத்துவது என் வழக்கம். அது கால போக்கில் படம் எடுக்கும் ஆசையை தூண்டியது.
படம் எடுப்பதற்காக நிறைய கதைகள் கேட்டேன். நான் கதைகள் கேட்டு வருவதை பார்த்து, என்னம்மா, நீங்களே நல்ல கதை சொல்றீங்க.. நீங்களே உங்களுக்கு பிடிச்ச மாதிரி கதை ஏன் எழுத கூடாதுன்னு என் பிள்ளைங்க கேட்டாங்க.. அப்படி உருவானது தான் இந்த “மரகதமலை”. குழந்தைகளை கவரும் வகையில் பல குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் புலி, யானை, டிராகன், கொரில்லா, பாம்பு, குதிரை என படம் அட்டகாசமாக புதுமையான பேண்டசி டிராமாவாக உருவாகி வருகிறது.
18ம் நூற்றாண்டில் நடந்த கதையாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு “தடா” காட்டுப்பகுதியில் மிக பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு, மொத்தம் 40 நாட்கள் தொடர்ந்து படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் மற்ற பணிகள் நடந்து வருகிறது. விரைவில் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு கூறினார்.