வில்லன் ஆன ஒளிப்பதிவாளர் | ஆண்ட்ரியா பட வழக்கு: தணிக்கை குழுவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு | நிர்வாகிகள் பதவி காலம் நீட்டிப்பு ஏன்? கோர்ட்டில் விஷால் விளக்கம் | ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் |
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் புதிய படங்கள் வெளியாகும் போது டிக்கெட் கட்டண உயர்வு கோரி அந்த மாநில அரசுகளிடம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்பின் அவர்களது கோரிக்கையை பரிசீலித்து படத்திற்கேற்றபடி டிக்கெட் கட்டண உயர்வுக்கு அனுமதி அளிப்பார்கள்.
இதுநாள் வரையில் தயாரிப்பாளர்களே நேரடியாக ஆந்திர மாநில அரசுக்கு விண்ணப்பித்து வந்தார்கள். இனி, அப்படி செய்யக் கூடாது, சம்பந்தப்பட்ட சங்கங்கள் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியிருந்தார். அதன்படி அவர் நடித்து இந்த மாதம் 12ம் தேதி வெளியாக உள்ள 'ஹரிஹர வீரமல்லு' படத்திற்காக அதன் தயாரிப்பாளர் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை மூலம் ஆந்திர மாநில அரசுக்கு விண்ணப்பித்துள்ளார். அதே சமயம், தெலங்கானா அரசுக்கு நேரடியாகவே விண்ணப்பித்துள்ளார்.
அவரது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு டிக்கெட் கட்டண உயர்வுக்கான அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவன் கல்யாண் பிறப்பித்த உத்தரவை அவர் நடித்த முதல் படமே பின் தொடர்வது ஒரு ஆச்சரிய ஒற்றுமை.