எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் புதிய படங்கள் வெளியாகும் போது டிக்கெட் கட்டண உயர்வு கோரி அந்த மாநில அரசுகளிடம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்பின் அவர்களது கோரிக்கையை பரிசீலித்து படத்திற்கேற்றபடி டிக்கெட் கட்டண உயர்வுக்கு அனுமதி அளிப்பார்கள்.
இதுநாள் வரையில் தயாரிப்பாளர்களே நேரடியாக ஆந்திர மாநில அரசுக்கு விண்ணப்பித்து வந்தார்கள். இனி, அப்படி செய்யக் கூடாது, சம்பந்தப்பட்ட சங்கங்கள் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியிருந்தார். அதன்படி அவர் நடித்து இந்த மாதம் 12ம் தேதி வெளியாக உள்ள 'ஹரிஹர வீரமல்லு' படத்திற்காக அதன் தயாரிப்பாளர் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை மூலம் ஆந்திர மாநில அரசுக்கு விண்ணப்பித்துள்ளார். அதே சமயம், தெலங்கானா அரசுக்கு நேரடியாகவே விண்ணப்பித்துள்ளார்.
அவரது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு டிக்கெட் கட்டண உயர்வுக்கான அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவன் கல்யாண் பிறப்பித்த உத்தரவை அவர் நடித்த முதல் படமே பின் தொடர்வது ஒரு ஆச்சரிய ஒற்றுமை.