ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
இசையமைப்பாளர் இளையராஜா தனது 83வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். சென்னை, தி.நகரில் உள்ள ஸ்டூடியோவிலும், வீட்டிலும் திரளான ரசிகர்கள், சினிமாகாரர்கள், விஐபிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினர். அவருக்கு நேற்று 83வது பிறந்தநாள் என்பதால் பலர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். ஸ்டூடியோ வாசலில் நின்று அவர் பாடல்களை பாடினர். இன்றைக்கு முன்னணி நடிகர்கள் தொடங்கி சின்ன நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், சினிமாகாரர்கள் என அனைவரிடமும் சோஷியல் மீடியா கணக்கு உள்ளது. ஆனால், நேற்றைக்கு பல முன்னணி நடிகர்கள், இளையராஜாவுடன் பணியாற்றவர்கள் , அவர் இசையில் பாடியவர்கள், அவரால் உயர்ந்தவர்கள், பணம் சம்பாதித்தவர்கள் என ஒரு தரப்பினர் அவருக்கு தங்கள் சோஷியல் மீடியாவில் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமாக்களில் சீனியர்களை கொண்டாடுகிறார்கள். தமிழில் 80 வயதை தொட்ட ஒரு சிலரில் இளையராஜாவும் ஒருவர். ஆனால், அவர் பிறந்தநாளுக்கு டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாவில் கூட பலர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது இளையராஜாவுக்கு நெருக்கமானர்களின் ஆதங்கமாக இருக்கிறது.