ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
தோழா படத்திற்கு பின் மீண்டும் ஒரு தமிழ் ஹீரோவுடன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்து இருக்கிறார் பிரபல தெலுங்கு ஹீரோவான நாகர்ஜூனா. தோழாவில் அவர் கார்த்தியுடன் நடித்தார். அந்த படத்தின் கதையும், சீன்களும் இன்றும் பேசப்படுகின்றன. இப்போது குபேராவில் தனுசுடன் இணைந்து நடித்து இருக்கிறார். கஷ்டப்படும் ஒருவன் பணக்காரன் ஆவதே கதை என்று கூறப்படுகிறது. அதனால், சென்னையில் நடந்த குபேரா பட விழாவில் டம்மி நோட்டுகளால் 'ரெட்கார்பேட்' சுற்றுவட்டாரங்கள் டிசைன் செய்யப்பட்டு இருந்தன.
குபேரா மேடையில் பேசிய நாகர்ஜூனா ''தனது சென்னை வாழ்க்கை, கிண்டி கல்லுாரியில் படித்தது உட்பட பல விஷயங்களை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார். அடுத்தும் ஒரு பிரபல தமிழ் ஹீரோ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் நாகர்ஜூனா, அது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி.
சென்னையில் வளர்ந்ததால் ஓரளவு நன்றாக தமிழ் பேசுவார் நாகர்ஜூனா. அவர் மூத்த மகன் நாகசைதன்யாவும் தமிழ் பேசுவார். பிரபல தெலுங்கு ஹீரோ நாகேஸ்வரராவ் மகனான நாகர்ஜூனா, கமல் பாணியில் குழந்தை பருவத்தில் இருந்தே நடிக்கிறார். அவரும் நடிக்க வந்து 60 ஆண்டுகளை தாண்டிவிட்டது. அவர் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் நல்ல கதை என்றால் பந்தா இல்லாமல் தமிழ் ஹீரோக்களுடன் பணிபுரிவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.