பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
தோழா படத்திற்கு பின் மீண்டும் ஒரு தமிழ் ஹீரோவுடன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்து இருக்கிறார் பிரபல தெலுங்கு ஹீரோவான நாகர்ஜூனா. தோழாவில் அவர் கார்த்தியுடன் நடித்தார். அந்த படத்தின் கதையும், சீன்களும் இன்றும் பேசப்படுகின்றன. இப்போது குபேராவில் தனுசுடன் இணைந்து நடித்து இருக்கிறார். கஷ்டப்படும் ஒருவன் பணக்காரன் ஆவதே கதை என்று கூறப்படுகிறது. அதனால், சென்னையில் நடந்த குபேரா பட விழாவில் டம்மி நோட்டுகளால் 'ரெட்கார்பேட்' சுற்றுவட்டாரங்கள் டிசைன் செய்யப்பட்டு இருந்தன.
குபேரா மேடையில் பேசிய நாகர்ஜூனா ''தனது சென்னை வாழ்க்கை, கிண்டி கல்லுாரியில் படித்தது உட்பட பல விஷயங்களை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார். அடுத்தும் ஒரு பிரபல தமிழ் ஹீரோ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் நாகர்ஜூனா, அது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி.
சென்னையில் வளர்ந்ததால் ஓரளவு நன்றாக தமிழ் பேசுவார் நாகர்ஜூனா. அவர் மூத்த மகன் நாகசைதன்யாவும் தமிழ் பேசுவார். பிரபல தெலுங்கு ஹீரோ நாகேஸ்வரராவ் மகனான நாகர்ஜூனா, கமல் பாணியில் குழந்தை பருவத்தில் இருந்தே நடிக்கிறார். அவரும் நடிக்க வந்து 60 ஆண்டுகளை தாண்டிவிட்டது. அவர் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் நல்ல கதை என்றால் பந்தா இல்லாமல் தமிழ் ஹீரோக்களுடன் பணிபுரிவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.