பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
தோழா படத்திற்கு பின் மீண்டும் ஒரு தமிழ் ஹீரோவுடன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்து இருக்கிறார் பிரபல தெலுங்கு ஹீரோவான நாகர்ஜூனா. தோழாவில் அவர் கார்த்தியுடன் நடித்தார். அந்த படத்தின் கதையும், சீன்களும் இன்றும் பேசப்படுகின்றன. இப்போது குபேராவில் தனுசுடன் இணைந்து நடித்து இருக்கிறார். கஷ்டப்படும் ஒருவன் பணக்காரன் ஆவதே கதை என்று கூறப்படுகிறது. அதனால், சென்னையில் நடந்த குபேரா பட விழாவில் டம்மி நோட்டுகளால் 'ரெட்கார்பேட்' சுற்றுவட்டாரங்கள் டிசைன் செய்யப்பட்டு இருந்தன.
குபேரா மேடையில் பேசிய நாகர்ஜூனா ''தனது சென்னை வாழ்க்கை, கிண்டி கல்லுாரியில் படித்தது உட்பட பல விஷயங்களை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார். அடுத்தும் ஒரு பிரபல தமிழ் ஹீரோ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் நாகர்ஜூனா, அது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி.
சென்னையில் வளர்ந்ததால் ஓரளவு நன்றாக தமிழ் பேசுவார் நாகர்ஜூனா. அவர் மூத்த மகன் நாகசைதன்யாவும் தமிழ் பேசுவார். பிரபல தெலுங்கு ஹீரோ நாகேஸ்வரராவ் மகனான நாகர்ஜூனா, கமல் பாணியில் குழந்தை பருவத்தில் இருந்தே நடிக்கிறார். அவரும் நடிக்க வந்து 60 ஆண்டுகளை தாண்டிவிட்டது. அவர் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் நல்ல கதை என்றால் பந்தா இல்லாமல் தமிழ் ஹீரோக்களுடன் பணிபுரிவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.