தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய கமல், தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறினார். அவரது இந்த பேச்சு, கர்நாடக மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். கன்னட அமைப்பினர், எழுத்தாளர்கள் போராட்டம் நடத்தினர். தனது பேச்சுக்காக கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரி வருகின்றன. ஆனால் 'அன்பின் மிகுதிக்கு மன்னிப்பு கேட்க முடியாது' என்று கமல் கூறிவிட்டார்.
இந்த நிலையில் கன்னட சினிமா வா்த்தக சபை (சேம்பர்) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தலைவர் நரசிம்மலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் கன்னடம் குறித்த நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகத்தில் அவர் நடித்துள்ள 'தக் லைப்' படத்தை திரையிட தடை விதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.