தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
காரைக்குடியில் இருந்த ஏவிஎம் ஸ்டூடியோவை மெய்யப்ப செட்டியார் சென்னைக்கு மாற்றினார். புதிய ஸ்டூடியோவில் தயாராகும் முதல் படத்தை தானே இயக்க விரும்பினார். அப்போது அவர் பா.நீலகண்டன் எழுதிய ஒரு கதையை அங்கீகரித்து அவரையே இயக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் தானே அந்த படத்தை இயக்கினார். அந்த படம் 'வாழ்க்கை'.
1939ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான 'பேச்சிலர் மதர்' . அதை தழுவி உருவான ஹிந்தி திரைப்படமான குன்வாரா பாப் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவானது. காதலன் ஏமாற்றி விட்டதால் அவன் மூலம் பிறந்த குழந்தையை பணக்கார பெண்ணான நாயகியின் காரில் அநாதையாக விட்டுச் செல்கிறாள் ஒரு பெண். அந்த குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நாயகிக்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
வைஜெயந்திமாலா, டி.ஆர்.ராமச்சந்திரன், கே.சாரங்கபாணி, எஸ்.வி.சஹஸ்ரநாமம், எம்.எஸ்.திரௌபதி, குளத்து மணி, சுப்பையா, பி.டி.சம்பந்தம், வி.எம்.ஏழுமலை, கே.என்.கமலம், எஸ்.ஆர்.ஜானகி உள்பட பலர் நடித்தனர். ஆர்.சுப்பாராமன் இசை அமைத்திருந்தார்.
இந்த படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது, ஒரு வருடத்திற்கு பிறகு கேவா கலருக்கு மாற்றப்பட்டு வெளியானது. 'ஜீவிதம்' என்ற பெயரில் தெலுங்கிலும், 'பாஹர்' என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீ மேக் ஆனது. வைஜயந்திமாலா இந்த படத்தின் மூலம் புகழ்பெற்றார்.