இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை |
காரைக்குடியில் இருந்த ஏவிஎம் ஸ்டூடியோவை மெய்யப்ப செட்டியார் சென்னைக்கு மாற்றினார். புதிய ஸ்டூடியோவில் தயாராகும் முதல் படத்தை தானே இயக்க விரும்பினார். அப்போது அவர் பா.நீலகண்டன் எழுதிய ஒரு கதையை அங்கீகரித்து அவரையே இயக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் தானே அந்த படத்தை இயக்கினார். அந்த படம் 'வாழ்க்கை'.
1939ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான 'பேச்சிலர் மதர்' . அதை தழுவி உருவான ஹிந்தி திரைப்படமான குன்வாரா பாப் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவானது. காதலன் ஏமாற்றி விட்டதால் அவன் மூலம் பிறந்த குழந்தையை பணக்கார பெண்ணான நாயகியின் காரில் அநாதையாக விட்டுச் செல்கிறாள் ஒரு பெண். அந்த குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நாயகிக்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
வைஜெயந்திமாலா, டி.ஆர்.ராமச்சந்திரன், கே.சாரங்கபாணி, எஸ்.வி.சஹஸ்ரநாமம், எம்.எஸ்.திரௌபதி, குளத்து மணி, சுப்பையா, பி.டி.சம்பந்தம், வி.எம்.ஏழுமலை, கே.என்.கமலம், எஸ்.ஆர்.ஜானகி உள்பட பலர் நடித்தனர். ஆர்.சுப்பாராமன் இசை அமைத்திருந்தார்.
இந்த படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது, ஒரு வருடத்திற்கு பிறகு கேவா கலருக்கு மாற்றப்பட்டு வெளியானது. 'ஜீவிதம்' என்ற பெயரில் தெலுங்கிலும், 'பாஹர்' என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீ மேக் ஆனது. வைஜயந்திமாலா இந்த படத்தின் மூலம் புகழ்பெற்றார்.