விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் |
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 230 கோடிக்கு மேல் வசூலித்து மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த முதல் படம் என்கிற பெயரையும் தட்டி சென்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில் பிரபல காமெடி நடிகரும் இயக்குனருமான சவுபின் சாஹிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததோடு அந்த படத்தை தனது சகோதரர் மற்றும் நண்பர் ஒருவருடன் இணைந்து தயாரித்து இருந்தார்.
படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலை ஈட்டிய சமயத்தில் கேரளாவின் மாராடு என்கிற பகுதியை சேர்ந்த சிராஜ் வலியதுரா என்பவர் இந்த படத்திற்காக தான் ஒன்பது கோடி கொடுத்ததாகவும் படம் வெளியான பிறகு லாபத்தில் தனக்கு 40 சதவீதம் பங்கு தருவதாக சொன்ன தயாரிப்பாளர்கள் தற்போது அதை மறுத்து பின்வாங்குவதாகவும் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து சவுபின் சாஹிர் அவரது சகோதரர் பாபு சாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதனை அடுத்து தயாரிப்பாளர் தரப்பிலிருந்து, சிராஜ் வலியதுரா தங்களுக்கு படப்பிடிப்பை நடத்தி தருவதாக ஒப்புக்கொண்ட பணத்தை உரிய நேரத்தில் தராததால் தங்களுக்கு படப்பிடிப்பில் பல இடைஞ்சல்கள் ஏற்பட்டு, அதனால் படப்பிடிப்பு தாமதமாகி மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் இந்த படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். அதனால் அவரது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை நிராகரித்து அவர்களது மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் விசாரணை சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.