பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து, 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் அட்லி. அதன்பிறகு விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். பின்பு பாலிவுட்டுக்கு சென்ற அவர் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய வெற்றி பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்து அல்லு அர்ஜூனின் 22வது படத்தை இயக்க இருக்கிறார்.
இது தவிர 'சங்கிலி புங்கிலி கதவ திற, அந்தகாரம்' என்ற தமிழ் படங்களையும், 'பேபி ஜான்' என்ற இந்திப் படத்தையும் தயாரித்தார். இந்த நிலையில் அட்லியின் கலைச் சேவையை பாராட்டி சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. அந்த விழாவில் அட்லிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.