300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சி நடத்த வருமானம் தருவதும், ஆட்சியாளர்களுக்கு முறைகேடாக பணம் தருவதும் மதுபான விற்பனைதான். அரசின் டாஸ்மாக் நிறுவனம் இந்த விற்பனையை செய்து வருகிறது.
தற்போது தமிழக அரசின் அதிகாரிகளும், அமைச்சர்களும் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு செய்திருப்பதாக பல கட்ட அதிரடி சோதனைகளுக்கு பிறகு அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது.
இந்த முறைகேட்டில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரனும் ஈடுபட்டிருப்பதாக அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. அவரது வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இதை தொடர்ந்து அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது.
ஆகாஷ் பாஸ்கரன் தனுஷ் நடிக்கும் 'இட்லி கடை', சிவகார்த்திகேயன் நடக்கும் 'பராசக்தி', மற்றும் சிம்பு நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கிறார். அதோடு 'இதயம் முரளி' என்ற படத்தை அவரே தயாரித்து இயக்கவும் செய்கிறார். இதில் முரளி மகன் அதர்வா நடிக்கிறார். இந்த படங்களில் மொத்த பட்ஜெட் 400 கோடிக்கு மேல் என்கிறார்கள்.
ஆகாஷ் பாஸ்கரனிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு அதன் அடிப்படையில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சிலருக்கு சம்மன் அனுப்பப்படலாம் என்று அமுலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. முறைகேடான பணத்தில் இருந்து இவர்கள் சம்பளம் பெற்றார்களா? என்பதாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். என்கிறார்கள்.