தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால், அதனால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்த நிகழ்வுகள் பல உண்டு. குறிப்பா டி.ராஜேந்தர், ரஜினி போன்றோர் இதனை செய்தனர். ஆனால் இதற்கு முன்னோடி என்.எஸ்.கிருஷ்ணன்.
நடிகராக முன்னணியில் இருந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன், ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் பெற்றவர். அவர் தயாரித்த படம் 'நல்லதம்பி'. 1936ம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படமான 'மிஸ்டர் டீட்ஸ் கோஸ் டு டவுன்' என்ற படம் என்.எஸ்.கிருஷ்ணனை மிகவும் கவர்ந்தது. அதனை தமிழில் படமாக்க விரும்பி, திமுக தலைவராக இருந்த சி.என்.அண்ணாதுரையை அந்த படத்தை பார்க்க வைத்து அதற்கு திரைக்கதை, வசனம் எழுதித் தருமாரு கேட்டார். அண்ணாதுரையும் கொடுத்தார். நல்ல தம்பி உருவானது.
மதுவிலக்கு, வரதட்சணை, ஜாதி கொடுமை, தீண்டாமை போன்றவற்றை கடுமையாக எதிர்த்து இதன் கதை, வசனம் அமைக்கப்பட்டது. படத்தில் பிரச்சார நெடி அதிகமாக இருந்தால் ஒரு சினிமாவாக நல்லதம்பி ரசிக்கப்படவில்லை. இதனால் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூலில் வெற்றி பெறவில்லை.
இதனால் அடுத்து அண்ணாத்துரை எழுத்தில் 'தம்பிதுரை என்ற படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதனை நஷ்டமடைந்தவர்களுக்கு குறைந்த தொகைக்கு கொடுக்க இருப்பதாகவும் அறிவித்தார். ஆனால் அண்ணாத்துரை மீண்டும் கதை வசனம் எழுத ஆர்வம் காட்டாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. என்றாலும் படம் பின்னர் லேட் பிக்அப் ஆகி ஓரளவிற்கு வசூலித்ததால் யாரும் பெரிய அளவில் நஷ்டமடையவில்லை என்பதால் என்.எஸ்.கேவும் தனது திட்டத்தை கைவிட்டார்.
'நல்ல தம்பி'யில் என்.எஸ்.கிருஷ்ணன் நாயகனாககவும். டி.ஏ.மதுரம் நாயகியாகவும் நடித்தனர் . இவர்களுடன் பானுமதி, எம்.என்.ராஜம், சஹஸ்ரநாமம், காகா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்தனர். கிருஷ்ணன் -பஞ்சு இரட்டையர்கள் இயக்கினார்கள். சி.ஆர்.சுப்பாராமன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.