ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
ஒரு காலத்தில் கமலுக்கு போட்டியாக கொண்டு வரப்பட்டவர்தான் மோகன். கமலின் கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் மோகனிடம் சென்ற காலமும் இருந்தது.
கர்நாடகாவை சேர்ந்த மோகனுக்கு தமிழ் அவ்வளவாக பேச வராது. அவரது குரலும் அவரது தோற்றத்துக்கு ஏற்ற குரலாக இல்லாமல் இருந்தது. இதனால் அவருக்கு எஸ்.என்.சுரேந்தர் (விஜய்யின் தாய்மாமன்) குரல் கொடுத்தார். எஸ்.என்.சுரேந்தர், நடிகராகவும், பாடகராகவும் இருந்தார். அவர் மோகனுக்கு 70 படங்கள் வரை டப்பிங் பேசினார்.
மோகன் முதன் முதலில் நடித்ததே கமலுடன்தான். பாலுமகேந்திரா இயக்கிய 'கோகிலா' என்ற கன்னட படத்தில் கமலுடன் நடித்தார் . பின்னர் நடிக்கவில்லை. அதன் பிறகு 1984ம் ஆண்டு வெளிவந்த 'ஓ மானே மானே' என்ற படத்தில் மோகனுக்காக 'பொன்மானைத் தேடுதே என் வீணை பாடுதே' என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார் கமல்.
இந்த பாடலை கமல் பாடியது குறித்து ஒரு சுவையான தகவல் உண்டு. வேறு படத்தின் பாடல்கள் குறித்து இளையராஜாவுடன் பேச பிரசாத் ஸ்டூடியோ சென்றார் கமல். அப்போது இளையராஜா 'பொன்மானை தேடுதே' பாடலின் ஒத்திகையில் இருந்தார்.
பாடல் ரொம்ப பிரமாதமாக இருக்கிறதே யார் பாடுகிறார்கள் என்றார் கமல். யாரையும் முடிவு செய்யவில்லை உனக்கு பிடிச்சிருந்தா நீயே பாடிவிடு என்றார் இளையராஜா . கமலும் ஒப்புக் கொண்டார். ஆனால் இந்த பாட்டுக்கு நடிக்கப்போவது மோகன் என்றாராம் இளையாராஜா. 'யாரு நடிச்சா என்ன பாட்டு உங்களோடதுதானே' என்ற கமல் உடனே பாடிக் கொடுத்தாராம்.