கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‛வாடிவாசல்' படம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும், இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் பின்னர் கிடப்பில் போட்டு விட்டார்கள். தற்போது ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த ஆண்டு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெற்றிமாறன் அளித்த ஒரு பேட்டியில், ‛‛வாடிவாசல் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், வாடிவாசல் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் எனது பங்களிப்பை செலுத்துவேன். அந்த வகையில் வாடிவாசல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானதற்கு நான் மட்டுமே காரணம் என்று சொல்ல மாட்டேன்'' என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன்.