சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‛வாடிவாசல்' படம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும், இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் பின்னர் கிடப்பில் போட்டு விட்டார்கள். தற்போது ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த ஆண்டு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெற்றிமாறன் அளித்த ஒரு பேட்டியில், ‛‛வாடிவாசல் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், வாடிவாசல் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் எனது பங்களிப்பை செலுத்துவேன். அந்த வகையில் வாடிவாசல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானதற்கு நான் மட்டுமே காரணம் என்று சொல்ல மாட்டேன்'' என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன்.