சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‛வாடிவாசல்' படம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும், இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் பின்னர் கிடப்பில் போட்டு விட்டார்கள். தற்போது ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த ஆண்டு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெற்றிமாறன் அளித்த ஒரு பேட்டியில், ‛‛வாடிவாசல் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், வாடிவாசல் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் எனது பங்களிப்பை செலுத்துவேன். அந்த வகையில் வாடிவாசல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானதற்கு நான் மட்டுமே காரணம் என்று சொல்ல மாட்டேன்'' என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன்.