'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் |
தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'குட் பேட் அக்லி' படத்தின் மூலம் இங்கு தயாரிப்பில் இறங்கியது தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்தப் படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் லாபத்தைக் கொடுத்த படம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'லவ் டுடே, டிராகன்' நடிகரான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க 'டூட்' படத்தை அடுத்து தயாரித்து வருகிறது. தொடர்ந்து தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் அந்நிறுவனம் புதிய படங்களைத் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்துடனும் பேசி வருவதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 'மென்டல் மதிலோ, அன்டே சுந்தரநிகி, சரிபொத சனிவாரம்' ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குனரான விவேக் ஆத்ரேயா அந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் ஒரு தகவல்.
ரஜினிகாந்த் தற்போது 'கூலி' படத்தில் நடித்து முடித்துவிட்டு, 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவரை வைத்து படம் தயாரிக்க வேல்ஸ் நிறுவனம் பேசி வருவதாகவும், கார்த்திக் சுப்பராஜ் அதை இயக்கலாம் என்றும் தகவல் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. தற்போது தெலுங்கு நிறுவனம், இயக்குனர் பெயரும் அடிபடுகிறது. யாருக்கு முன்னுரிமை என்பது விரைவில் தெரிய வரும்.