தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'குட் பேட் அக்லி' படத்தின் மூலம் இங்கு தயாரிப்பில் இறங்கியது தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்தப் படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் லாபத்தைக் கொடுத்த படம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'லவ் டுடே, டிராகன்' நடிகரான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க 'டூட்' படத்தை அடுத்து தயாரித்து வருகிறது. தொடர்ந்து தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் அந்நிறுவனம் புதிய படங்களைத் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்துடனும் பேசி வருவதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 'மென்டல் மதிலோ, அன்டே சுந்தரநிகி, சரிபொத சனிவாரம்' ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குனரான விவேக் ஆத்ரேயா அந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் ஒரு தகவல்.
ரஜினிகாந்த் தற்போது 'கூலி' படத்தில் நடித்து முடித்துவிட்டு, 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவரை வைத்து படம் தயாரிக்க வேல்ஸ் நிறுவனம் பேசி வருவதாகவும், கார்த்திக் சுப்பராஜ் அதை இயக்கலாம் என்றும் தகவல் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. தற்போது தெலுங்கு நிறுவனம், இயக்குனர் பெயரும் அடிபடுகிறது. யாருக்கு முன்னுரிமை என்பது விரைவில் தெரிய வரும்.




