சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
'மதராசபட்டினம்' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்த லண்டன் நடிகை எமி ஜாக்சன், அதன் பிறகு 'தாண்டவம், தெறி, 2.0' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக 'மிஷன் சாட்டர்-1' என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணத்திற்கு முன்பே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்த எமி ஜாக்சன், பின்னர் அவரை பிரிந்து விட்டார். அதன் பிறகு எட் வெஸ்ட் விக் என்ற ஹாலிவுட் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சனுக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறப்புக்கு பிறகு ஓராண்டு காலமாக நடிக்காமல் இருந்து வந்த எமி ஜாக்சன் தற்போது மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார். இது குறித்து அவர் தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ஒரு வருடத்திற்கு பிறகு மகன்களைப் பிரிந்து மீண்டும் வேலைக்கு செல்ல போகிறேன். இது மிகவும் கடினமாக உள்ளது. எப்போது வீடு திரும்பி மகன்களை பார்ப்பேனோ என்ற ஏக்கம் உள்ளது. இப்படி என்னைப் போலவே என்னை பிரியும் கஷ்டம் என் மகன்களுக்கும்தான் இருக்கும். அதை நினைக்கும் போது சற்று ஆறுதலாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.