வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

ரெட்ரோ படத்திற்கு பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். திரிஷா நாயகியாக நடிக்கிறார். சுவாசிகா, ஷிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி வெளியீடு என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இதே தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் 2, பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே., ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. இதனால் ஒரே நாளில் சூர்யா, கார்த்தி படங்கள் நேரடியாக மோதுவது போன்ற சூழல் உருவானது. இந்நிலையில் திடீரென சர்தார் 2 படம் தீபாவளி வெளியீட்டில் இருந்து பின் வாங்கி உள்ளது. படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அண்ணன் சூர்யாவிற்கு வழிவிட்டுள்ளார் தம்பி கார்த்தி.