நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
ரெட்ரோ படத்திற்கு பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். திரிஷா நாயகியாக நடிக்கிறார். சுவாசிகா, ஷிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி வெளியீடு என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இதே தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் 2, பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே., ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. இதனால் ஒரே நாளில் சூர்யா, கார்த்தி படங்கள் நேரடியாக மோதுவது போன்ற சூழல் உருவானது. இந்நிலையில் திடீரென சர்தார் 2 படம் தீபாவளி வெளியீட்டில் இருந்து பின் வாங்கி உள்ளது. படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அண்ணன் சூர்யாவிற்கு வழிவிட்டுள்ளார் தம்பி கார்த்தி.