2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து பெரும் வசூலைக் குவித்த படம் 'புஷ்பா 2'. அப்படத்தின் பிரிமியர் காட்சி ஐதராபாத் சந்தியா தியேட்டரில் நடந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் நெரிசலில் சிக்கி கடும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஐந்து மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீதேஜ் குணமடைந்து வருவதால் அவரை மறுவாழ்வு மையம் ஒன்றில் சில நாட்கள் தங்கியிருக்க மருத்துவர்கள் கூறியிருந்தனர். அங்கு மாற்றப்பட்ட சிறுவன் ஸ்ரீதேஜை அல்லு அர்ஜுனின் அப்பா தயாரிப்பாளர் அல்லு அர்விந்த் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
“ஸ்ரீதேஜ் குணமடைய எங்களது மொத்த குடும்பமும் காத்திருக்கிறது. நாளுக்கு நாள் ஸ்ரீதேஜ் குணமடைந்து வருவதைப் பார்க்கும் போது நிறைவாக உள்ளது,” என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேஜின் சிகிச்சைக்காக அல்லு அர்ஜுன் தரப்பும், புஷ்பா 2 தயாரிப்பாளர் தரப்பும் 2 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருந்தார்கள்.
மருத்துவமனையிலிருந்து வந்தாலும் மற்றவர்களை நினைவு கூறும் அளவிற்கு ஸ்ரீதேஜ் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது மருத்துவமனை டாக்டர்கள் தகவல்.