50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
பாரதிராஜா இயக்கிய 'தெக்கத்திப் பொண்ணு' டி.வி தொடர் மூலம் பிரபலமானவர், பெருமாயி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த அன்னம்பாரிபட்டியை சேர்ந்தவர். ஏராளமான படங்களில் கிராமத்து பாட்டியாக, அப்பத்தாவாக நடித்தார். 'மனம் கொத்திப் பறவை, வில்லு, தண்டட்டி' ஆகியவை அவர் நடித்த முக்கியமான படங்கள்.
73 வயதான பெருமாயி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் பெருமாயி நேற்று வீட்டில் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். பெருமாயிக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.