துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
விஜய் நடிக்கும் கடைசி படமான 'ஜனநாயகன்' படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கிய பகுதிகளின் படப்பிடிப்பு கொடைக்கானல் மலைபகுதியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் சென்றார். தாண்டிக்குடி பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பங்களாவில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார்.
நேற்று 3வது நாளாக தகவுமலை பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. தான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள் வரை கரடு முரடான மலை பாதையில் ஜீப்பில் பயணம் செய்த விஜய் அதன்பிறகு பாதை இல்லாத காரணத்தால் ஜீப்பில் இருந்து இறங்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே படப்பிடிப்புக்கு சென்றார்.
அங்கிருந்து தகவுமலை நாதன் சிவன் கோவிலை அடைந்த அவர், சிறிது நேரம் கோவிலில் ஓய்வெடுத்து விட்டு பின்னர் அங்கு நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படப்பிடிப்பை முடித்து மீண்டும் 3 கிலோ மீட்டர் நடந்து வந்து, பின்னர் ஜீப்பில் தாண்டிக்குடி திரும்பினார். படப்பிடிப்புகள் முடிந்து விட்டதால் விஜய் இன்று சென்னை திரும்பினார்.
இந்த பயணத்தின்போது வழிநெடுகிலும் மலைக்கிராம மக்கள் விஜயை காண திரண்டிருந்தனர். அப்போது திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி விஜய் கையசைத்து சென்றார். தாண்டிக்குடி அருகே பெண்கள் வரிசையாக நின்று ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றனர்.