விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் கர்நாடக இசை பாடல்களே வந்தது. ஜி.ராமநாதன் கர்நாடய இசை பாடல்களை எளிமை ஆக்கினார். அதற்கு பிறகு வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் மெல்லிசை பாடல்களை தந்தார், இளையராஜா கிராமிய பாடல்களை கொண்டு வந்தார், ஏ.ஆர்.ரகுமான் ஜுபி இசை மற்றம் மேற்கத்திய இசையை கொண்டுவந்தார்.
இவைகளுக்கு இடையில் சென்னைக்கென்றே பிரத்யேகமாக உள்ள கானா பாடல்களும் சினிமாவிற்கு வந்தது. சென்னை ஒரு காலத்தில் கடற்கரையை நம்பிய நகரமாக இருந்து. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மக்கள், கப்பலுக்கு பாரம் சுமக்க செல்லும் மக்கள் தங்கள் களைப்பு நீங்க, எந்த ராக குறிப்பும் இல்லாமல். மனதில் உள்ளதை மனம்போன போக்கில் பாடியதுதான் கானா பாடல்.
இந்த பாடல் முதன் முறையாக சினிமாவுக்குள் வந்தது, 'பொம்லாட்டம்' படத்தில். முக்தா சீனிவாசன் தயாரித்து இயக்கிய இந்த படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா, நாகேஷ், சச்சு, வெண்ணிற ஆடை மூர்த்தி, சோ, உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தில் சோவும், மனோரமாவும் ஜாம்பஜாரில் வசிப்பவர்களாக சென்னை பாஷை பேசி நடித்திருந்தார்கள். இதையொட்டி சென்னைக்கே பிரத்யேகமான கானா பாடலை சேர்க்க விரும்பினார் முக்தா சீனிவாசன். அந்த பாடல்தான்,
'வா வாத்யாரே ஊட்டாண்ட
நீ வராங்காட்டினா நா உடமாட்டேன்.
ஜாம்பஜார் ஜக்கு,
நான் சைதா பேட்டை கொக்கு....'
என்பதாக அமைந்தது அந்த பாடல். முதல் கானா பாடலை பாடிய பெருமை மனோரமாவுக்கு கிடைத்தது. பாடலை எழுதியவர் கவிஞர் வாலி, அவருக்கு சென்னை ஸ்லாங் தெரியாததால் கானா பாடகர் எம்.எல்.கோவிந்த் என்பவரின் உதவியுடன் இந்த பாடலை எழுதினார். வி.குமார் இசை அமைத்தார். அதன் பிறகு அவ்வப்போது கானா பாடல்கள் படங்களில் இடம்பெற்றது. என்றாலும் தேவாவின் வருகைக்கு பிறகு கானா பாடல்கள் முழுமையான திரைவடிவம் பெற்றது.