சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
சினிமாவில் அறிமுகமாகும்போது எல்லா நடிகைகளும் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்பார்கள். ஆனால் காலப்போக்கில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் அபூர்வமாக ஒரு சில நடிகைகளே சொன்ன சொல்லை கடைசிவரை காப்பாற்றி இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் சுஜாதா. சுஜாதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. அப்பா சங்கர மேனன், ரொம்பவே ஆச்சாரமான குடும்பம். அதனால் சுஜாதா சினிமாவில் நடிக்கவே கூடாது என்று கூறிவந்தார் தந்தை. சுஜாதாவிற்கும் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை.
சுஜாதாவின் அண்ணன் கோபிநாத் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வந்தார். அப்போது அவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால் நடிக்கவில்லை. அதனால் தனது தங்கை சுஜாதாவை சினிமாவில் நடிக்க வைத்து பெரிய நடிகையாக்க விரும்பினார். அவரது முயற்சியால் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
முதல் படம் 'தபஸ்வினி'. இதில் விதவையாக சோகமான கேரக்டரில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததாலோ என்னவோ அவர் நடித்த 40 மலையாள படங்களிலும் சோகமான கேரக்டர்களிலேயே நடித்தார். 1974ல் 'அவள் ஒரு தொடர்கதை' மூலம் தமிழுக்கு வந்தார். அதிலும் சோகமான கேரக்டர்தான்.
'அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, சந்திப்பு, தீர்ப்பு, திருப்பம், நூல்வேலி, பூந்தளிர், மயங்குகிறாள் ஒரு மாது, விதி' என விதவிதமான கேரக்டர்களில் நடித்தார். முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், விஜயகுமார், ரஜினி, கமல் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். ஒரு கட்டத்தில் யார்யாருக்கெல்லாம், ஜோடியாக நடித்தாரோ அவர்களுக்கெல்லாம் அம்மாவாக நடித்தார். சுஜாதா நடித்த கடைசி படம் 'வரலாறு'. இதில் அஜித்தின் அம்மாவாக நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்த சுஜாதா, எந்த படத்திலும் கவர்ச்சியாக நடிக்கவில்லை. பெரும்பாலும் சோக கேரக்டர்களிலேயே நடித்தார்.