சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வெளியான டிராகன் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து தமிழில் அறிமுகமானவர் கயாடு லோஹர். முதல் படமே அவருக்கு வெற்றியை கொடுத்ததோடு, அவரது நடிப்பும் இளவட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டதால் கோலிவுட்டில் கவனிக்கப்படும் நடிகையாகி இருக்கிறார். தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக இதயம் முரளி என்ற படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து சிம்பு நடிக்கும் 49 வது படத்தில் நடிக்கப் போகிறார்.
ஒரு பேட்டியில் யாருடன் இப்போது நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள்? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என்றாலும் ஹாய் சொல்லும் அளவுக்கு தான் நட்பு வைத்திருக்கிறேன். தேவை இல்லாமல் சுற்றிக் கொண்டு திரியும் ரிலேஷன்ஷிப்பை நான் யாரிடத்திலும் வைத்துக் கொள்வதில்லை. அத்தனை சீக்கிரத்தில் நான் யாரிடத்திலும் சிக்கிக் கொள்ளவும் மாட்டேன். இன்றைக்கு ஒரு ஆண் நண்பர் உடன் சாதாரணமாக நட்பு வைத்தாலே அதற்கு பலதரப்பட்ட அர்த்தம் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதனால் யாருடனும் எப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப்பிலும் நான் இல்லை. நான் உண்டு, என் வேலை உண்டு என்று மட்டுமே இருக்கிறேன்'' என தெரிவித்திருக்கிறார் கயாடு லோஹர்.