மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வெளியான டிராகன் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து தமிழில் அறிமுகமானவர் கயாடு லோஹர். முதல் படமே அவருக்கு வெற்றியை கொடுத்ததோடு, அவரது நடிப்பும் இளவட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டதால் கோலிவுட்டில் கவனிக்கப்படும் நடிகையாகி இருக்கிறார். தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக இதயம் முரளி என்ற படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து சிம்பு நடிக்கும் 49 வது படத்தில் நடிக்கப் போகிறார்.
ஒரு பேட்டியில் யாருடன் இப்போது நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள்? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என்றாலும் ஹாய் சொல்லும் அளவுக்கு தான் நட்பு வைத்திருக்கிறேன். தேவை இல்லாமல் சுற்றிக் கொண்டு திரியும் ரிலேஷன்ஷிப்பை நான் யாரிடத்திலும் வைத்துக் கொள்வதில்லை. அத்தனை சீக்கிரத்தில் நான் யாரிடத்திலும் சிக்கிக் கொள்ளவும் மாட்டேன். இன்றைக்கு ஒரு ஆண் நண்பர் உடன் சாதாரணமாக நட்பு வைத்தாலே அதற்கு பலதரப்பட்ட அர்த்தம் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதனால் யாருடனும் எப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப்பிலும் நான் இல்லை. நான் உண்டு, என் வேலை உண்டு என்று மட்டுமே இருக்கிறேன்'' என தெரிவித்திருக்கிறார் கயாடு லோஹர்.