மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான தொடரும் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. பொதுவாக இப்போது இருக்கும் மலையாள ஹீரோக்களில் சண்டைக் காட்சிகளின் மூலம் ரசிகர்களை வசீகரிப்பதில் இப்போதும் மோகன்லால் தான் முதலிடத்தில் இருக்கிறார். அந்த வகையில் அவரது படங்களில் தொடர்ந்து சண்டை காட்சிகளை வடிவமைத்து வருபவர் ஸ்டன்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா தான். ஒன்றிரண்டு படங்களில் மட்டும் பீட்டர் ஹெய்ன் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இந்த தொடரும் படத்திலும் ஸ்டண்ட் சில்வா தான் பணியாற்றியுள்ளார்.
கிளைமாக்ஸுக்கு முந்தைய அரைமணி நேரத்தில் கிட்டத்தட்ட மூன்று சண்டைக்காட்சிகள் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. மூன்றுமே விறுவிறுப்பாகவும் கதையின் போக்கில் இருக்கை நுனியில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகர்களிடம், “அவர்களை விடாதே.. அடி” என்று உத்வேகத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பரபரப்பாக உருவாக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து நெகிழ்ந்து போன ஸ்டண்ட் சில்வா தனது சோசியல் மீடியா பக்கத்தில், “தொடரும் படத்திற்கும் படத்தில் என்னுடைய வேலைக்கும் கிடைத்து வரும் பாசிட்டிவான விமர்சனங்களை பார்த்து மகிழ்ந்து போயிருக்கிறேன். மோகன்லால் சாருக்கும் மொத்த படக்குழுவிற்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்” என்று கூறியுள்ளார்.