மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகர் தர்ஷன்.. தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு அண்ணாநகரில் உள்ள இவரது வீட்டின் முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பு வைக்கும் ஒருவரின் மகன் தனது காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக சென்று உள்ளார். காரை நீண்ட நேரமாக எடுக்காமல் இருந்ததால் இதுகுறித்து தர்ஷனுக்கும் நீதிபதியின் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இது குறித்து ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் இருதரப்பினரும் மாறி மாறி புகார் அளித்தனர். இதில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருதரப்பினரும் இந்த வழக்கில் தாங்கள் சமரச உடன்படிக்கை செய்து கொள்ள முன்வந்துள்ளதாகவும், ஆதலால் தங்கள் வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் கூறினார்கள். இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜிகே இளந்திரையன் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.