'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி | கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா |

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகர் தர்ஷன்.. தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு அண்ணாநகரில் உள்ள இவரது வீட்டின் முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பு வைக்கும் ஒருவரின் மகன் தனது காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக சென்று உள்ளார். காரை நீண்ட நேரமாக எடுக்காமல் இருந்ததால் இதுகுறித்து தர்ஷனுக்கும் நீதிபதியின் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இது குறித்து ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் இருதரப்பினரும் மாறி மாறி புகார் அளித்தனர். இதில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருதரப்பினரும் இந்த வழக்கில் தாங்கள் சமரச உடன்படிக்கை செய்து கொள்ள முன்வந்துள்ளதாகவும், ஆதலால் தங்கள் வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் கூறினார்கள். இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜிகே இளந்திரையன் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.