தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

உலகின் மிகப்பெரிய இசை கோர்வையாக கருதப்படும் சிம்பொனி இசையை இளையராஜா நிகழ்த்தி சாதனை படைத்தார். தற்போது இளையராஜா போன்றே சிம்பொனி இசை அமைக்க இருக்கிறார் கணேஷ் பி.குமார்.
சென்னையைச் சேர்ந்த இவர் லண்டனின் டிரினிட்டி இசைக் கல்லூரியில் இசைத்துறை உரிமம் பெற்றவர். இவர் 'ரைஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள சிம்பொனியை ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் புகழ்பெற்ற செரிமோனியல் அரங்கில் வருகிற 27ம் தேதி அரங்கேற்றுகிறார். சிம்பொனியை அந்தோணி ஆர்மோர் வழி நடத்துகிறார்.
இதுகுறித்து கணேஷ் பி.குமார் கூறும்போது 'இந்த சிம்பொனியை 2020ம் ஆண்டில் திட்டமிட்டோம். கொரோனா காலம் வந்து விட்டதால் அப்போது அரங்கேற்ற முடியவில்லை. காலம் கனிந்து வந்திருப்பதால் இப்போது நடத்துகிறோம்" என்றார்.