பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

விஜய் சேதுபதி நடிப்பில் 'ஏஸ்','டிரெயின்' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து அவர் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. நடிகை சார்மி உடன் இணைந்து பூரி ஜெகன்நாத் தயாரிக்கவும் செய்கிறார். முக்கியே வேடத்தில் தபு நடிக்கிறார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான கடைசி இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.
இப்படியான நிலையில் அவர் இயக்கத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், ''என்னுடைய இயக்குநர்கள் முன்பு செய்த படைப்புகளை வைத்து அவர்களை நான் மதிப்பிட மாட்டேன். எனக்கு கதைப் பிடித்திருந்தால் அதில் நான் நடிப்பேன். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அத்திரைப்படம் ஒரு முழுமையான அக்ஷன் படமாக இருக்கும். இப்படியான ஒரு கதை களத்தில் இதற்கு முன் நான் படம் நடிக்கவில்லை. நான் செய்த விஷயங்களையே மீண்டும் செய்யாமல் பயணிக்காத களங்களுக்கும் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்குகிறோம்" என கூறினார்.