தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் |
விஜய் சேதுபதி நடிப்பில் 'ஏஸ்','டிரெயின்' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து அவர் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. நடிகை சார்மி உடன் இணைந்து பூரி ஜெகன்நாத் தயாரிக்கவும் செய்கிறார். முக்கியே வேடத்தில் தபு நடிக்கிறார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான கடைசி இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.
இப்படியான நிலையில் அவர் இயக்கத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், ''என்னுடைய இயக்குநர்கள் முன்பு செய்த படைப்புகளை வைத்து அவர்களை நான் மதிப்பிட மாட்டேன். எனக்கு கதைப் பிடித்திருந்தால் அதில் நான் நடிப்பேன். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அத்திரைப்படம் ஒரு முழுமையான அக்ஷன் படமாக இருக்கும். இப்படியான ஒரு கதை களத்தில் இதற்கு முன் நான் படம் நடிக்கவில்லை. நான் செய்த விஷயங்களையே மீண்டும் செய்யாமல் பயணிக்காத களங்களுக்கும் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்குகிறோம்" என கூறினார்.