ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ள படத்தை பான் வேர்ல்டு படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதனால், சர்வதேச அளவில் பிரபலமான கதாநாயகிகளைப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று தேடி வருகிறார்களாம்.
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவை அதற்காக அணுகி இருக்கிறார்கள். அவர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து வருவதும் ஒரு காரணம். ஆனால், அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க 'நோ' சொல்லிவிட்டாராம்.
ராஜமவுலி படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடும் போதே படப்பிடிப்புக்கு அழைக்கப்படும் நாட்களில் வர வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். அதனால்தான் அவர் அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க 'நோ' சொன்னாராம். மேலும், ஹிந்தியில் 'க்ரிஷ் 4' படத்தில் நடிக்கவும் சம்மதம் சொல்லி இருக்கிறாராம் பிரியங்கா. இதனால், தேவையில்லாத சிக்கல் ஏற்பட வேண்டாம் என தவிர்த்திருக்கிறார்.
அல்லு அர்ஜுனுடன் இதற்கு முன் நடித்த நடிகைகளை ஜோடியாக்க வேண்டாம் என்று அட்லி சொல்லி வருகிறாராம். சர்வதேச பிரபல நடிகைகளைத் தேர்வு செய்வார்களா, அல்லது சமந்தா, ஜான்வி கபூர் என இந்தியப் பிரபலங்களையே தேர்வு செய்வார்களா என்பது விரைவில் தெரிய வரும்.