தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் |
தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் ஷாலினி பாண்டே. தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் சிறிய இடைவெளிக்குப் பிறகு தனுஷின் 'இட்லி கடை' படத்தில் நடித்து வருகிறார்.
இப்போது ஷாலினி பாண்டே அளித்த பேட்டி ஒன்றில் அவர் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து அவர் கூறியதாவது, "அப்போது எனக்கு 22 வயது. நான் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். கேரவனில் நான் உடை மாற்றிக் கொண்டு இருக்கும்போது, அந்த படத்தின் இயக்குநர் கேரவன் கதவை தட்டாமல் உள்ளே நுழைந்து விட்டார். அதிர்ச்சியடைந்த நான் கத்தி திட்டி, இயக்குநரை அனுப்பிவிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள், இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றார்கள். அப்போது எனக்கு இந்த பிரச்னையை எப்படி கையாள வேண்டும் எனத் தெரியவில்லை என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன்" என தெரிவித்துள்ளார். ஆனால், அந்த இயக்குனரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.