ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா அதிரடியான படங்களை எடுத்து பெயர் வாங்கியதை விட, சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததன் மூலமே சமீபகால ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலமாகிவிட்டார், அரசியல் குறித்தும் சினிமா துறையில் உள்ளவர்கள் குறித்தும் மனதில் பட்டதை கூறுகிறேன் என இவர் வெளியிடும் சோசியல் மீடியா பதிவுகள் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தின. இதன் மூலம் இவர் கைது செய்யப்படும் அளவிற்கு எல்லாம் நிலைமை சீரியசாக சென்றது. அப்படி ஒரு முறை நடந்த நிகழ்வு ஒன்றை சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ராம்கோபால் வர்மா.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான்கைந்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய டுவிட்டர் பதிவுகள் காரணமாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு என்னை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது. ஆனால் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் என்னை போனில் அழைத்து, உன்னை கைது செய்வதற்காக வருகிறார்கள். சட்டப்படி என்பதால் எதுவும் மோசமாக நடந்து கொள்ளாதே என்று கூறினார்,
அதே சமயம் என்னுடைய வழக்கறிஞர்கள் குழுவுடன் இதுபற்றி விவாதித்தபோது என் மீது பதியப்பட்ட வழக்கில் புதிய சட்ட விதிகளின்படி வழக்கு பதிய முடியாது, கைது செய்ய முடியாது என நீதித்துறை கூறியிருந்தது. ஆனால் இது எதையும் அறியாமல் என்னை கைது செய்ய வந்த போலீசாரிடம் இந்த தகவலை தெரிவித்த போது என்ன செய்வது என்றால் தெரியாமல் குழம்பி நின்றனர். பிறகு என் வீட்டிற்குள் வந்து என்னுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு உற்சாகமாக பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பி சென்றார்கள்” என்று கூறியுள்ளார்.