வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

மாருதி இயக்கத்தில், பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் பான் இந்தியா படமான 'தி ராஜா சாப்' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'சஹானா சஹானா' பாடல் இரண்டு தினங்களுக்கு முன்பு ஐதரபாத்தில் உள்ள லூலு மாலில் நடைபெற்றது. படத்தின் நாயகிகளில் ஒருவரான நிதி அகர்வால் நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில் அங்கு கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தார். அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தனர்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. படக்குழுவினர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறையான பாதுகாப்பை அளிக்கத் தவறியது குறித்து சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், குகட்பள்ளி ஹவுசிங் போர்டு போலீஸ் இது குறித்து தாமாகவே (Suo Motu) புகார் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளது. லூலு மாலின் நிர்வாகம், நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்த ஈவன்ட் நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. தங்களிடம் முறையான அனுமதியைப் பெறவில்லை என அந்தக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.