சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தமிழ் திரையுலகம் கண்ட தலை சிறந்த பாடலாசிரியர்களில் மிகவும் குறிப்பிடும்படியான ஒருவராக பார்க்கப்படுபவர்தான் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். வலியோரும், எளியோரும் புரிந்து கொள்ளும் வகையில், எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடுவது இவரது தனிச்சிறப்பு. சிறுவயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, புத்துயிர் பெற்ற கவிஞராக உயர்ந்து காட்டியவர்.
கவிதைகள் பாடியும், எழுதியும் தோழர்களை உற்சாகமூட்டியவர். அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், மாடு மேய்ப்பவராக இருந்து பின் மாட்டு வியாபாரியாக, மாம்பழ வியாபாரியாக, தேங்காய் வியாபாரியாக, கீற்று விற்பனையாளராக, மீன், நண்டு பிடித் தொழிலாளியாக, உப்பளத் தொழிலாளியாக என இளமையிலிருந்து பல்வேறு பணிகளைச் செய்து, வாழ்வின் அனைத்தையும் கற்றுணர்ந்தவராக, அரசியல் தெளிவு பெற்று பின் பாடகனாக, நடிகனாக, நடனக்காரனாக இருந்து இறுதியில் கவிஞனாக உருப்பெற்றவர் இவர்.
ஒரு நாடகக் கம்பெனியில் நடிகராக இருந்து வந்த இவரது நண்பர் நம்பிராஜன் சிபாரிசின் பேரில் “படித்த பெண்” என்ற திரைப்படத்திற்கு முதன் முதலாக பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவர் பாடல் எழுதி வெளிவந்த முதல் திரைப்படம் “மகேஸ்வரி” என்றிருந்தாலும், இவர் எழுதிய முதல் பாடல் “படித்த பெண்” திரைப்படத்திற்காகத்தான். படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட, பாடல் எழுதியதற்கான தொகை ரூ 150ஐ கேட்டுப் பெறுவதற்காக அந்தக் கம்பெனி முதலாளியைத் தேடி அவரது வீட்டிற்கே சென்றார் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
வீட்டிற்குள் விட உதவியாளர் மறுத்துவிட, கோபம் கொண்ட கவிஞர், கவிதை ஒன்றை எழுதி, இதை உன் முதலாளியிடம் கொடு என்று கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். “தாயால் வளர்ந்தேன் தமிழால் அறிவு பெற்றேன், நாயே நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன், நீ யார் என்னை நில்லென்று சொல்லுதற்கு?” என்று கவிஞர் எழுதியிருந்த அந்தக் கவிதையைப் படித்த படத் தயாரிப்பாளர் பழமையில் நம்பிக்கைக் கொண்டவர் என்பதால் “கவிஞன் அறம் பாடிவிட்டானே?” என்று பதறிப்போய் பணத்தைக் கொடுத்தனுப்பினார்.