கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மலையாளப் படம் 'எல் 2 எம்புரான்'. படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக இருந்தது என சர்ச்சை எழுந்தது. அது குறித்து வருத்தம் தெரிவித்த மோகன்லால் அக்காட்சிகளை நீக்குவோம் என உறுதியளித்தார். அதன்பின் அக்காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கை செய்து நேற்று முதல் அது திரையிடப்பட்டது.
இதனிடையே, இப்படம் தற்போது 200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “தடைகளை உடைத்தெறிந்து 200 கோடியை வசூலித்து, 'எம்புரான்' வரலாறு படைத்துள்ளது,” என மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து நாட்களுக்குள்ளாகவே இந்த சாதனையைப் படைத்துள்ளது. 200 கோடி வசூலைக் கடந்துள்ள இரண்டாவது மலையாளப் படம் இது. இதற்கு முன்னதாக கடந்த வருடம் வெளிவந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' படம் 250 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'எல் 2 எம்புரான்' முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.