லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்திய படங்கள் எதுவும் தேர்வாகவில்லை. ஆனால் லண்டனில் வசிக்கும் இந்தியரான சந்தியா சூரி இயக்கிய 'சந்தோஷ்' என்ற படம் இறுதி சுற்றுக்கு தேர்வானது. இந்த படம் இங்கிலாந்து நாட்டின் சார்பில் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டது. தற்போது இந்த படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்தை இந்திய தணிக்கை வாரியம் படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதித்துள்ளது.
படத்தில் உள்ள கருத்துக்கள், காட்சிகள் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் சில காட்சிகள், பல வசனங்களை நீக்கினால் மட்டுமே வெளியிட அனுமதி தரப்படும் என்று தணிக்கை வாரியம் கூறியது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்து விட்டது.
இதனால் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடலாமா என்பது குறித்து படக்குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம். கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.