கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடிகை சோனா தனது வாழ்க்கை கதையை 'ஸ்மோக்' என்ற பெயரில் வெப் தொடராக தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இந்த தொடரின் படப்பிடிப்பு புட்டேஜ் அடங்கிய ஹார்டிஸ்கை படத்தில் பணியாற்றிய மானேஜர் எடுத்து வைத்துக் கொண்டு தர மறுப்பதாகவும், அவருக்கு ஆதராவாக பெப்சி செயல்படுவதாகவும் கூறி பெப்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த பிரச்னையில் நடிகர் சங்கம் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளது. ஹார்டிஸ்க்கும் சோனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சோனா கூறம்போது, "நான் ஒரு விஷயத்துல இறங்கிவிட்டால் அதற்கு தீர்வு காணாமல் விடமாட்டேன். இப்போது இந்த விஷயம் நல்ல படியாக முடிந்திருக்கிறது. இதில் நடிகர் சங்கம் தலையிட்டதும் பெப்சி அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதில் நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். எல்லா விஷயத்தையும் நான் சொன்னேன். அவர்கள் என் தரப்பு நியாயத்தை உணர்ந்து ஹார்டிஸ்கை வாங்கி கொடுத்தார்கள். இந்த விஷயத்தில் எனக்கு உதவிய பெப்சி நிர்வாகத்துக்கும், நடிகர் சங்கத்துக்கும், எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி எனது பணியை நான் விரைவாக தொடர்வேன்'' என்றார்.