கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
1947ம் ஆண்டு தியாகராஜ பாகவதரும், அன்றைய முன்னணி இளம் நடிகையுமான வசுந்தராதேவி ஆகியோர் நடிப்பதாக பிரமாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கிய படம் 'உதயணன் வாசவதத்தா'. படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கினார், ஏ.எஸ்.ஏ.சாமி வசனம் எழுதினார். பாபநாசம் சிவன் இசை அமைத்தார்.
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்தது. 25 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவருக்கு பதிலாக பாடகர் ஜி.என்.பாலசுப்பிரமணியம் நடித்தார்.
இவருடன் எம்.எஸ்.சரோஜா, டி.பாலசுப்ரமணியம், கே.சாரங்கபாணி, காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், என்.கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.வீரப்பா, டி.கே.சம்பங்கி, எம்.வி.மணி, கொளத்து மணி, வி.நா.ராஜா, டி. கமலம், கே.என்.ராஜம் மற்றும் என்.நாகசுப்ரமணியம் ஆகியோர் நடித்தனர்.
பாகவதர் நடிக்காததால் பல விநியோகஸ்தர்கள் வியாபாரத்தை துண்டித்தனர். அழகான காதல் கதை, ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் மார்கஸ் பர்ட்லே, வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட். ஆனாலும் தியாகராஜா பாகவதர் நடிக்காததால் படம் படுதோல்வி அடைந்தது.