குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
1947ம் ஆண்டு தியாகராஜ பாகவதரும், அன்றைய முன்னணி இளம் நடிகையுமான வசுந்தராதேவி ஆகியோர் நடிப்பதாக பிரமாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கிய படம் 'உதயணன் வாசவதத்தா'. படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கினார், ஏ.எஸ்.ஏ.சாமி வசனம் எழுதினார். பாபநாசம் சிவன் இசை அமைத்தார்.
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்தது. 25 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவருக்கு பதிலாக பாடகர் ஜி.என்.பாலசுப்பிரமணியம் நடித்தார்.
இவருடன் எம்.எஸ்.சரோஜா, டி.பாலசுப்ரமணியம், கே.சாரங்கபாணி, காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், என்.கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.வீரப்பா, டி.கே.சம்பங்கி, எம்.வி.மணி, கொளத்து மணி, வி.நா.ராஜா, டி. கமலம், கே.என்.ராஜம் மற்றும் என்.நாகசுப்ரமணியம் ஆகியோர் நடித்தனர்.
பாகவதர் நடிக்காததால் பல விநியோகஸ்தர்கள் வியாபாரத்தை துண்டித்தனர். அழகான காதல் கதை, ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் மார்கஸ் பர்ட்லே, வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட். ஆனாலும் தியாகராஜா பாகவதர் நடிக்காததால் படம் படுதோல்வி அடைந்தது.