ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
இந்த வருடம் வெளியான 'குடும்பஸ்தன்' படம் பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியில் நடிகை சான்வே மேகன்னாவுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. வெண்ணிலா கதாபாத்திரத்திற்கு அவரது இயல்பான மற்றும் ஆழமான நடிப்பு, ரசிகர்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மறக்க முடியாததாக மாற்றியுள்ளது. 'குடும்பஸ்தன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர துவங்கி உள்ளன.
சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு எதிர்பாராத விதமாகதான் வந்தது. ஐதராபாத்தில் சான்வே படித்துக் கொண்டிருக்கும்போது அவரிடம் ஏதோ ஒன்று சிறப்பாக இருப்பதை கணித்த நடிகை ஜெயசுதா, சான்வேக்கு முதல் பெரிய வாய்ப்பை கொடுத்தார். அந்த தருணம்தான் சான்வேக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. பிட்ட காதலு, புஷ்பக விமானம் போன்ற படங்களில் நடித்தார். குடும்பஸ்தன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.
குடும்பஸ்தன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சான்வி மேக்னாவுக்கு தொடர்ந்து குடும்ப கதைகளில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது, ஆனால் அவருக்கு எல்லா விதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டுமாம் குறிப்பாக ஆக்ஷன் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : 'குடும்பஸ்தன்' படம் கதாநாயகியாக எனக்கு பெரும் வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. குடும்பஸ்தன் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பலரும் தங்களுடன் பொருத்திக் கொண்டார்கள். ரசிகர்கள் கொடுத்து வரும் பாராட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அடுத்தடுத்து அதே மாதிரியான பட வாய்ப்புகள் வருவது மகிழ்ச்சி தான். ஆனால் ஆக்ஷன், ஸ்பை த்ரில்லர், தீவிரமான ஸ்போர்ட்ஸ் கதை, ரொமான்டிக் காமெடி போன்ற வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்புகிறேன். இதுபோன்ற கதைகளில் முழுமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்த முடியும். என்றார்.