லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராகிணி திவேதி. இவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதையடுத்து மீண்டும் திரைப்படங்களில் ராகினி திவேதி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூருவில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் நடிகை ராகினி திவேதி கலந்து கொண்டார். அப்போது அவருடன் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். ஒரு ரசிகர், ராகினி திவேதியின் கையை பிடித்து இழுத்தார்.
இதனால் கோபமடைந்த நடிகை ராகினி திவேதி உடனே அந்த ரசிகரை கடுமையான வார்த்தைகளால் ஆங்கிலத்தில் திட்டியதோடு அவரது கன்னத்தில் பலமாக அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாவலர்கள் அந்த ரசிகரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.