ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராகிணி திவேதி. இவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதையடுத்து மீண்டும் திரைப்படங்களில் ராகினி திவேதி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூருவில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் நடிகை ராகினி திவேதி கலந்து கொண்டார். அப்போது அவருடன் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். ஒரு ரசிகர், ராகினி திவேதியின் கையை பிடித்து இழுத்தார்.
இதனால் கோபமடைந்த நடிகை ராகினி திவேதி உடனே அந்த ரசிகரை கடுமையான வார்த்தைகளால் ஆங்கிலத்தில் திட்டியதோடு அவரது கன்னத்தில் பலமாக அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாவலர்கள் அந்த ரசிகரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.