யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
2025ம் ஆண்டின் இரண்டு மாத முடிவில் 45 படங்கள் வரை தியேட்டர்களில் வெளியாகின. அவற்றில் மூன்று படங்கள் மட்டுமே லாபரகமான படங்களாக அமைந்தது. வாராவாரம் சராசரியாக நான்கைந்து படங்களாவது வெளிவந்து கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களில் ஒரே நாளில் அதிகப் படங்கள் வெளியான வாரமாக பிப்ரவரி 14ம் தேதி அமைந்தது. அன்றைய தினம் 9 படங்கள் வெளிவந்தன. அவற்றில் ஒன்று கூட வெற்றிகரமான ஓடவில்லை, விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறவில்லை. ஒரே நாளில் அத்தனை படங்கள் வெளிவந்தால் குறைந்த அளவிலான தியேட்டர்களே கிடைக்கும். மீண்டும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது என திரையுலகில் உள்ளவர்களே சொன்னார்கள். ஆனால், அதெல்லாம் எந்த தயாரிப்பாளர் சங்கம் காதிலும், வினியோகஸ்தர்கள் சங்க காதிலும் விழவில்லை போலிருக்கிறது.
மீண்டும் அது போன்ற ஒரு வாரமாக இந்த வாரம் அமையப் போகிறது. இந்த வாரம் மார்ச் 7ம் தேதி வெள்ளிக்கிழமையன்று 9 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
“அம்பி, அஸ்திரம், படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக் பீஸ், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி'' என 9 படங்கள் அன்றைய தினம் வெளியாகின்றன. அவற்றில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள 'கிங்ஸ்டன்' படம் மட்டும்தான் நட்சத்திர அந்தஸ்துள்ள படமாக வெளியாகிறது. அப்படங்கள் வெளிவந்த பிறகுதான் அவற்றின் வரவேற்பு பற்றி சொல்ல முடியும்.