Advertisement

சிறப்புச்செய்திகள்

யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: எதிர்பார்ப்பை புறக்கணித்து ஏமாற்றமளித்த “எல்லோரும் நல்லவரே”

03 மார், 2025 - 10:39 IST
எழுத்தின் அளவு:
Flashback:-“Ellorum-Nallavare”-defies-expectations-and-disappoints


கன்னடத் திரையுலகில் பிரபல நடிகர்கள் யாருமின்றி அன்றைய புதுமுக நடிகர்களை வைத்தே தயாரிக்கப்பட்ட திரைப்படம்தான் “பூதய்ய ந மக அய்யு” என்ற திரைப்படம். 1974ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் கதையை எழுதிய கோரூர் நாராயணசாமி அய்யங்கார் வாழ்ந்த கலசபுரா என்ற கிராமத்திலேயே இந்தக் கன்னடத் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு பெரிய வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருந்த இத்திரைப்படத்தைப் பார்த்த ஜெமினி ஸ்டூடியோ எஸ் எஸ் பாலன், வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இந்தக் கன்னடத் திரைப்படத்தின் கதையை வாங்கினார். ஏற்கனவே ப்ரூவ்டு சப்ஜெக்டில் சில மாற்றங்கள் செய்து வெளியிட்ட “ஒளிவிளக்கு” திரைப்படம் தந்த நல் அனுபவம் இந்தக் கன்னடத் திரைப்படத்தையும் தமிழில் தயாரிக்க அவரை உத்வேகப்படுத்தியது.

கன்னடத் திரைப்படம் எங்கு தயாரிக்கப்பட்டதோ அதே கலசபுரம் கிராமத்திற்கே தனது படக்குழுவினருடன் சென்று படப்பிடிப்பையும் ஆரம்பித்தார் எஸ் எஸ் பாலன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரிக்க திட்டமிட்டிருந்ததால் மிகுந்த பொருட் செலவில் கலசபுரம் என்ற கிராமத்தில் 80ஆயிரம் ரூபாய் செலவில் கட்டடம் ஒன்றை கட்டி, கதைப்படி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அதை தீயிட்டுக் கொளுத்தியுமிருந்தனர். சூழ்நிலைகள் காரணமாக சிலர் ஆவேசம் அடைந்து, அண்டை அயலாருடன் வெறுப்பை வளர்த்து, அமைதியை சிதைத்து அழிவிற்கு வித்திடுகின்றனர்.

உண்மையில் பார்க்கப் போனால் உலகில் எல்லோரும் நல்லவரே என்ற கருத்தினை சொல்ல முற்படுவதுதான் இத்திரைப்படத்தின் கரு. ஆகவே தமிழில் தயாரித்து, இயக்கிய எஸ் எஸ் பாலன் இத்திரைப்படத்திற்கு “எல்லோரும் நல்லவரே” என்றே பெயரிட்டிருந்தார். 1975ல் வெளிவந்த இத்திரைப்படம் கன்னடத்தில் மட்டுமே வெற்றியை சுவைத்தது. தமிழில் தோல்வியையே சந்தித்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: துன்பியல் முடிவால் தோல்வியைத் தழுவிய எம் ஜி ஆரின் “பாசம்” திரைப்படம்பிளாஷ்பேக்: துன்பியல் முடிவால் ... 'டிராகன்' 100 கோடி: நன்றி சொன்ன இயக்குனர் 'டிராகன்' 100 கோடி: நன்றி சொன்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in