யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
100 கோடி ரூபாய் வசூலை தனது இரண்டாவது படத்திலேயே பெற்றிருக்கிறார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து. அவர் இயக்கிய முதல் படமான 'ஓ மை கடவுளே' படமும் வியாபார ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. இருந்தாலும் இரண்டாவது படத்தில் வளரும் நாயகனான பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைத்து 100 கோடி வசூலைப் பெற்றிருப்பது சாதாரண விஷயமல்ல.
தனது 'டிராகன்' படம் 100 கோடி வசூலைப் பெற்றதற்கு நன்றி தெரிவித்து, “அன்புள்ள ரசிகர்களே, என் குழுவிற்கு நீங்கள் அளித்த அனைத்து அன்புக்கும் 100 கோடி நன்றி. தனிப்பட்ட விதத்தில், வெளியீட்டிற்கு முன்பு சிலர் என்னுடைய தன்னம்பிக்கையை உடைக்க முற்பட்ட போது, 'நாங்க இருக்கோம் பார்த்துக்கலாம்' என்று சொன்ன உங்க எல்லோருக்கும் நன்றி. இந்த படத்தில் உள்ள தவறுகளை சரி செய்து, அடுத்த படத்தை சிறப்பாகத் தருவேன் என சத்தியம் செய்கிறேன்,” என அஷ்வத் மாரிமுத்து குறிப்பிட்டுள்ளார்.
'டிராகன்' படம் வெளியான 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்துள்ளது. இந்த ஆண்டில் 'விடாமுயற்சி' படத்திற்குப் பிறகு 100 கோடி வசூலைத் தந்த இரண்டாவது படம். ஆனால், லாபகரமான முதல் 100 கோடி படம் என்பது குறிப்பிடத்தக்கது. 'லவ் டுடே' படத்திற்குப் பிறகு தனது இரண்டாவது படத்தையும் 100 கோடி கிளப்பில் சேர்த்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அவர் நடித்து அடுத்து வெளியாக உள்ள 'லவ் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன்' படமும் அப்படி வசூலித்தால் ஹாட்ரிக் 100 கோடி. நடக்குமா என பொறுத்திருப்போம்.