பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஜெய்ப்பூர் அரண்மனையில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணத்திரைக் காவியம் என்ற பெருமிதத்தோடு வெளிவந்த திரைப்படம்தான் “அடிமைப் பெண்”. எம் ஜி ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், எம் ஜி ஆர் நாயகனாக நடித்து, இயக்குநர் கே சங்கர் அதிக பொருட் செலவில் இயக்கிய திரைப்படமாக அமைந்தது இத்திரைப்படம். இதன் வெளிப்புறப் படப்பிடிப்பின் ஒரு பகுதியாக ஜெய்ப்பூர் அரண்மனையை தேர்வு செய்திருந்தனர் படக்குழுவினர். ஜெய்ப்பூர் அரண்மனையில் அதுவரை யாரும் படம் பிடிக்க இயலாத இடங்களில் எல்லாம் “அடிமைப் பெண்” திரைப்படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டு அன்றே பெரும் சாதனை புரிந்திருந்தனர். சாதாரணமாக அரண்மனை போல ஸ்டூடியோவிற்கு வெளியே பிரமாண்ட செட் ஒன்றை அமைத்துத்தான் படமாக்குவது வழக்கம். ஆனால் எம் ஜி ஆர் அதற்கும் ஒருபடி மேலேயே சென்று சாதித்திருந்தார் என்றால் அது மிகையன்று.
ஜெய்ப்பூர் அரண்மனைக்குள்ளேயே மற்றொரு அரண்மனை பகுதியை தன்னுடன் வந்த கலைஞர்களைக் கொண்டே கட்டவும் செய்திருந்தார் எம் ஜி ஆர். இத்திரைப்படத்திற்காக ஆயிரம் ஒட்டகங்களை வாடகை;கு அமர்த்தி, ஒவ்வொரு ஒட்டகத்திற்கும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 வீதமும், ஒட்டகம் ஓட்டி ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 வீதம் என சம்பளம் கொடுக்கப்பட்டதோடு, மனித உணவு மற்றும் ஒட்டங்களின் உணவு என ஒவ்வொரு நாளும் இதற்காக பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள் வாடகையாகவும், சவாரி செய்பவர்களுக்கென தனிச்சாப்பாடு என்று அனைத்து செலவினங்களையும் ஏற்றிருந்தது “எம் ஜி ஆர் பிக்சர்ஸ்”.
இன்றைய “பாகுபலி” திரைப்படத்தின் முன்னோடியாக பார்க்கப்படும் இத்திரைப்படம், 1969ஆம் ஆண்டு வெளிவந்தது. மற்ற ராஜா ராணி திரைப்படங்களிலிருந்து இத்திரைப்படத்திற்கென ஒரு தனிச்சிறப்பும் உண்டு. பேச்சுத் தமிழில் வெளிவந்த முதல் ராஜா ராணி திரைப்படம் என்ற அடையாளத்தோடு வெளிவந்த திரைப்படமாகவும் அறியப்படுவதுதான் இந்த “அடிமைப் பெண்” திரைப்படம்.