ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
இயக்குனர் லிங்குசாமி தமிழில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி , பையா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். கடைசியாக இவரது இயக்கத்தில் அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் ஆகிய படங்கள் தொடர் தோல்வியை தழுவின.
சமீபகாலமாக லிங்குசாமி அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் லிங்குசாமி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, "மகாபாரதத்தை வைத்து அபிமன்யு, அர்ஜூனன் என இரண்டு பாக கதையம்சம் கொண்ட படத்தினை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ. 700 கோடி பட்ஜெட், தற்போது எல்லா தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது. இதனால் பெரிய போர் காட்சிகளை உயிரோட்டமாக கொண்டு வர முடியும். மகாபாரதம் என்றால் நமக்கு பி.ஆர். சோப்ராவின் படைப்பு தான் நினைவுக்கு வரும். அது மாதிரி வேலை எனக்கு வந்துள்ளது. சீக்கிரம் அதற்கான அறிவிப்பு வெளிவரும்" என தெரிவித்துள்ளார்.